Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கந்தசாமி கோவிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு 

அக்டோபர் 03, 2023 05:15

மல்லசமுத்திரம்: காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு நடந்தது.
நேற்று புரட்டாசி மாத கிருத்திகை தினத்தை முன்னிட்டு, சேலம், நாமக்கல் மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் நடந்தது.

கோவில் உட்பிரகாரத்தில் உற்சவ மூர்த்தியான முருகன் வள்ளி, தெய்வாணையுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

சேலம் ஈரோடு, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி என பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தலைப்புச்செய்திகள்